‘தமிழகத்தில் விரைவில் பால் விற்பனையை துவங்க உள்ளோம்’ - ‘அமுல்’ நிர்வாக இயக்குனர் சோதி சிறப்பு பேட்டி‘தமிழகத்தில் விரைவில் பால் விற்பனையை துவங்க உள்ளோம்’ - ‘அமுல்’ நிர்வாக ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.16 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.16 ...
இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்நாட்டு நிறுவனங்களிடம் நம்பிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
08:09

புதுடில்லி : ‘அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற வளர்ந்த நாடு­கள், ‘உள்­நாட்­டி­ன­ருக்கு வேலை­வாய்ப்பு; உள்­நாட்டு உற்­பத்­திக்கு முன்­னு­ரிமை’ என, ‘பாது­காப்­பு­ரிமை’ கொள்­கையை கடை­பி­டிக்க துவங்­கி­யுள்ளன. இது, வளர்ந்த நாடு­க­ளுக்­கான இந்­தி­யா­வின் ஏற்­று­ம­தி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’ தெரி­வித்து உள்­ளது.இது குறித்து, ‘பிக்கி’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:கடந்த மார்ச் – ஏப்., மாதங்­களில், 185 நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அதில், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் பாதிப்­பில் இருந்து, அவை வெகு விரை­வாக விடு­பட்டு, வளர்ச்­சியை நோக்கி திரும்­பி­யுள்­ளது தெரிய வந்­தது. அதே சம­யம், வளர்ந்த நாடு­களின் பாது­காப்­பு­ரிமை கொள்­கை­யால், ஏற்­று­மதி குறை­யுமோ என்ற அச்­ச­மும் உள்­ளது.ஆய்­வில் பங்­கேற்ற, 65 சத­வீத நிறு­வ­னங்­கள், செப்., வரை, விற்­பனை நன்கு இருக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்ளன. அது போல, 42 சத­வீத நிறு­வ­னங்­கள், லாபம் உய­ரும் என, எதிர்­பார்க்­கின்றன.தற்­போது உள்­ளதை விட, ஏற்­று­ம­திக்­கான தேவை அதி­க­ரிக்­கும் என, 31 சத­வீத நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன. கூடு­தல் பணி­யா­ளர்­களை நிய­மிக்க உள்­ள­தாக, 27 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. முத­லீ­டு­களை அதி­க­ரிக்க, 40 சத­வீத நிறு­வ­னங்­கள் திட்­ட­மிட்டு உள்ளன.ரிசர்வ் வங்கி, கட­னுக்­கான வட்­டியை குறைத்­துள்ள போதி­லும், அவற்­றின் பயனை, வங்­கி­கள் வழங்­க­வில்லை என, பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்­கள் கவலை தெரி­வித்து உள்ளன.கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு முன் இருந்­ததை விட, தற்­போது, பொரு­ளா­தார சூழல் மேம்­பட்டு உள்­ள­தாக, 54 சத­வீத நிறு­வ­னங்­களும், இது, அடுத்த ஆறு மாதங்­களில், மேலும் மேம்­படும் என, 79 சத­வீத நிறு­வ­னங்­களும் நம்­பிக்கை கொண்­டுள்ளன.நாட்­டின் பணப்­பு­ழக்­கம், எதிர்­பார்த்­ததை விட, விரை­வாக இயல்பு நிலைக்கு திரும்­பி­யுள்­ளது. இத­னால், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள், சகஜ நிலைக்கு மாறி­யி­ருப்­பது, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.நிறு­வ­னங்­க­ளி­டையே, வளர்ச்­சி­யில் நம்­பிக்கை குறித்த அள­வீடு, கடந்த இரு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது. இது, பண மதிப்பு நீக்­கம் கார­ண­மாக, கடந்த ஆய்­வில், இதே அள­விற்கு சரிவை கண்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
தொழில் துறை குமுறல்குறைந்த வட்­டி­யில் கடன் வழங்­கி­னால், தொழில் வளர்ச்சி பெரு­கும் என்ற நோக்­கத்­தில், கடந்த இரு ஆண்­டு­க­ளாக, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றன.ரிசர்வ் வங்கி, 2015 ஜன., – 2016 அக்., வரை, வங்­கி­கள் பெறும் கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 1.75 சத­வீ­தம் குறைத்­தது. ஆனால், வங்­கி­கள், இதே அள­வில், கட­னுக்­கான வட்­டியை குறைக்­க­வில்லை. ஓர­ளவு மட்­டுமே குறைத்­துஉள்­ள­தாக, தொழில் துறை­யி­னர் குமு­று­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)