பதிவு செய்த நாள்
03 மே2017
07:42
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் அமலுக்கு வர உள்ளது.பல முனை வரிகளுக்கு மாற்றாக, ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் இந்த திட்டத்தை, மேலும், இரு மாதங்கள் தள்ளி வைக்குமாறு, சிறிய, நடுத்தர நிறுவனங்கள், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பாக, மேக்ஸ் ஸ்டாண்டர்ட் ரீடெய்ல், எஸ்.ஆர்.எஸ்., குழுமம், வி மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், கடிதம் அனுப்பியுள்ளன.அதன் விபரம்:அடுத்த காலாண்டிற்கான, ‘ஆர்டர்’ கள் வரத் துவங்கிவிட்டன. ஆனால், இன்னும் இறுதியான, ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் வெளியிடப்படவில்லை. அதனால், அந்த வரிகளுக்கேற்ப, அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை, தெளிவாக முடிவு செய்ய இயலாத நிலை உள்ளது. ஆகவே, சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதை, செப்., வரை தள்ளி வைக்க வேண்டும். இந்த கால அவகாசம், புதிய ஆர்டர்களை பெறவும், அதற்கேற்ப சில்லரை விற்பனையை நிர்ணயிக்கவும் அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|