பதிவு செய்த நாள்
03 மே2017
07:42
புதுடில்லி, மே 3–இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள, ஹீரோ மோட்டோ கார்ப்., நிறுவனம், அதன் தயாரிப்புகளின் விலையை, 500 – 2,200 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம்வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி, வாகனங்களின் மாடலை பொறுத்து, 500 – 2,200 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.நிறுவனம், 40 ஆயிரம் ரூபாய் விலையில், ‘டான்’ மோட்டார் சைக்கிள் முதல், ௧ லட்சம் ரூபாய் விலையுள்ள, ‘கரிஷ்மா’ வரை, பல்வேறு மாடல்களை விற்பனை செய்கிறது.கடந்த ஏப்ரலில், நிறுவனத்தின் வாகன விற்பனை, 3.49 சதவீதம் குறைந்து, 5,91,306 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6,12,739 ஆக இருந்தது.நடப்பு திருமண காலத்தில், அதிக வாகனங்கள் விற்பனையாகி, நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|