பதிவு செய்த நாள்
03 மே2017
07:43
புதுடில்லி : ஹோண்டா கார்ஸ் இந்தியா, கடந்த ஏப்., மாதத்தில், 14,480 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 10,486 கார்களாக குறைந்திருந்தது. கடந்த மாதம், இந்நிறுவனம், 438 ‘பிரையோ’ மாடல் கார்களை விற்பனை செய்துஉள்ளது. இதேபோல், 2,061 ‘ஜாஸ்’, 2,029 ‘அமேஸ்’ மற்றும் 5,948 ‘சிட்டி’ மாடல் கார்களை விற்றுள்ளது.ஹோண்டா நிறுவனம், புதிய மாடல் காரான, ‘டபிள்யு. ஆர். – வி’ மற்றும், புதிய ஹோண்டா சிட்டி கார்களை, சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றுக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. 12 ஆயிரம் பேர், டபிள்யு.ஆர். – வி மாடல் காருக்கும், 25 ஆயிரம் பேர், ஹோண்டா சிட்டி காருக்கும், முன்பதிவு செய்துள்ளனர்.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் யோய்ச்சிரோ உனோ கூறுகையில், ‘‘புதிய நிதியாண்டு, எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை தந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடரும் என நம்புகிறோம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|