பதிவு செய்த நாள்
03 மே2017
07:44
மும்பை : பொதுத் துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன், ‘டெர்ம் டிபாசிட்’ எனப்படும், குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டியை, 0.50 சதவீதம் குறைத்துள்ளது.இதன்படி, 2 – 3 ஆண்டுகள் வரை, 1 கோடி ரூபாய்க்கு உட்பட்ட, குறித்த கால டிபாசிட்டிற்கான வட்டி, 6.75 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.இதே காலத்தில், மூத்த குடிமக்களின் டிபாசிட்டிற்கான வட்டி, 7.25 சதவீதத்தில் இருந்து, 6.75 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மேலும், 3 முதல், 10 ஆண்டுகள் வரை, முதிர்வு காலம் கொண்ட டிபாசிட்டிற்கான வட்டி, 6.75 சதவீதத்தில் இருந்து, 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.எனினும், 7 நாட்கள் முதல், 2 ஆண்டுகள் வரை உள்ள டிபாசிட்டிற்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.இவ்வங்கி, ஓராண்டு முதல், 455 நாட்கள் வரையிலான டிபாசிட்டிற்கு, 6.90 சதவீதம் வட்டி வழங்குகிறது. எஸ்.பி.ஐ., கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இதன், ஓராண்டிற்கான, எம்.சி.எல்.ஆர்., வட்டி, 8 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|