பதிவு செய்த நாள்
04 மே2017
07:38
மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த, மெய்சன் மான்ட்பிளாங் கூட்டாக இணைந்து, கை கடிகாரம், தோல் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள், விற்றுமுதலை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளன.இது குறித்து, டைட்டன் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பட் கூறியதாவது:எங்கள் கூட்டு நிறுவனத்திற்கு, மும்பை, டில்லி, புனே, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில், ஏழு கடைகள் உள்ளன. நடப்பாண்டில், கூடுதலாக, ஏழு புதிய கடைகள் துவக்கப்பட உள்ளன. கூட்டு நிறுவனமான மான்ட்பிளாங், இணையதளம் வாயிலாகவும், பொருட்களை விற்பனை செய்கிறது.இதன் மூலம், முக்கிய நகரங்கள் அல்லாத பகுதிகளிலும், எங்கள் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளில், மொத்த கடைகளின் எண்ணிக்கையை, 25 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டு களில், எங்களின் விற்றுமுதல், 600 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|