பதிவு செய்த நாள்
04 மே2017
07:41
நியூயார்க் : ‘‘இந்திய மொபைல் போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின், ‘ஐபோன்’ பயன்பாடு குறைவாக உள்ள போதிலும், தற்போது, ‘4ஜி’ தொழில்நுட்ப சேவைகள், வேகமாக பரவி வருவதால், எதிர்காலத்தில் மிகச் சிறப்பான இடத்தை பிடிப்போம்,’’ என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நம்பிக்கை தெரிவித்தார்.அவர், ஆப்பிள் நிறுவனத்தின், ஜன., – மார்ச் வரையிலான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு, மேலும் பேசியதாவது:சர்வதேச அளவில், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், இந்திய பிரிவின் வருவாய், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு, புதிய சாதனை படைத்துள்ளது. பிரமிக்க வைக்கிறதுஇந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, மேலும் வலுவாக காலுான்றுவோம். இந்தியா, எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடாகும். ஏராளமான இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுடன், மிக விரைவான பொருளாதார வளர்ச்சியை, இந்தியா கண்டு வருகிறது.குறிப்பாக, அதிவிரைவாக, படங்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ள உதவும், ‘4ஜி’ தொழில்நுட்பத்திற்கு தேவையான முதலீடுகளும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், இந்தியாவில் பெருகி வருகின்றன.இது, ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து, மிகுந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது. ஸ்மார்ட் போன் சந்தையில், சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா உள்ளது.ஆனால், கடந்த ஆண்டு, நான்காவது காலாண்டு முதல், ‘4ஜி’ தொழில்நுட்ப ஒருங்கிணப்பு வசதிக்கான முதலீடுகள் குவியத் துவங்கி, வேகமாக அதிகரித்து வருவது பிரமிக்க வைக்கிறது.இத்தகைய விரைவான வளர்ச்சியை, உலகில், வேறு எந்த நாட்டிலும் இதுவரை நான் கண்டதில்லை. உண்மையிலேயே, இந்தியா, என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஆப்பிள் நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், மிக பிரமாதமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.சுமுக தீர்வுஅதனால், சந்தையில் தற்போது எங்கள் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், வரும் காலத்தில், குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், நான் உள்ளிட்ட பெரும்பான்மையானோரின் கருத்துப்படி, இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் நன்கு உள்ளது.சமீபத்தில், இந்தியாவில், ஆப்பிள் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. அது போல, இதர சந்தைகளில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்புகள், விற்பனை மையங்கள் உள்ளிட்ட, அனைத்து வகையான வர்த்தகங்களையும், இந்தியாவிற்கு கொண்டு வருவோம். இது தொடர்பாக, மத்திய அரசுடன் பேசி, அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு காண்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் உயர்வுஅமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், கடந்த, ஏப்., 1 வரையிலான இரண்டாவது காலாண்டில், 5,290 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 5,060 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், நிகர வருவாய், 1,000 கோடி டாலரில் இருந்து, 1,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், சர்வதேச விற்பனையின் பங்கு, 65 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|