பதிவு செய்த நாள்
05 மே2017
01:57
மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம், கடந்த ஏப்ரலில், 1.83 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், ஒய்.எஸ்.குலேரியா கூறியதாவது:கடந்த, ஏப்., மாத மோட்டார் சைக்கிள் விற்பனையில், முதன்முறையாக, இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மதிப்பீட்டு மாதத்தில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது; பைக் விற்பனை, 22 சதவீதம் உயர்ந்து, 1,83,266 ஆக உள்ளது.ஸ்கூட்டர் பிரிவில், ‘ஆக்டிவா’ மாடல், இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரலில் மட்டும், முதன்முறையாக, 3,68,618 என்றளவில் விற்பனையாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பஜாஜ் ஆட்டோவின் இருசக்கர வாகன விற்பனை, 19 சதவீதம் குறைந்ததால், இரண்டாவது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஹோண்டா, விரைவில், ஹீரோவை விஞ்சி, முதலிடத்தை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|