பதிவு செய்த நாள்
05 மே2017
02:00
புதுடில்லி : மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியதாவது:கடந்த இரு ஆண்டுகளாக, விமானங்களில், பயணியர் போக்குவரத்து, இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், சரக்கு போக்குவரத்து வளர்ச்சி, 7 சதவீதமாக உள்ளது. இது, அடுத்த இரு ஆண்டுகளில், 9 சதவீதமாக உயரும். சரக்கு விமான போக்குவரத்தில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.விமான துறை முன்னேற்றத்திற்கு, ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், ‘உதான்’ திட்டத்தின் கீழ், சிறிய நகரங்களுக்கும், குறைந்த கட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.இது போன்ற நடவடிக்கைகளால், விமானங்களில், பயணியர் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும்.விமானங்களில், விரைவாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள, காகிதமற்ற, டிஜிட்டல் ஆவண நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், சரக்கு விமான போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|