பதிவு செய்த நாள்
05 மே2017
02:00
புதுடில்லி : டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் கார்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.இதன்படி, சொகுசு வகையைச் சேர்ந்த, பார்ச்சூனர் மாடல் கார் விலை, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த கார் விலை, 26.60 லட்சம் ரூபாய் மற்றும் 31.86 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. இன்னோவா கிரிஸ்டா மாடல் கார் விலை, 1 சதவீதம் உயர்ந்துஉள்ளது.அந்த காரின் விலை, 13.99 லட்சம் ரூபாய் மற்றும் 21.19 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த விலை, இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், எட்டியாஸ், கொரோலா, காம்ரி உள்ளிட்ட மாடல் கார்களின் விலையை, அந்நிறுவனம் உயர்த்தவில்லை.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உலோகம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|