பதிவு செய்த நாள்
07 மே2017
04:04
புதுடில்லி : மொபைல் போன் அழைப்புகளின் தரத்தை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள, புதிய, ‘மொபைல் ஆப்’பை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ அறிமுகப்படுத்த உள்ளது.சர்வதேச அளவில், மொபைல் போன் பயன்பாட்டில், இந்தியா முன்னணில் உள்ளது. இந்தியாவில், 112 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் செயல்பாட்டை, ‘டிராய்’ எனப்படும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் கண்காணித்து வருகிறது.உள்நாட்டில், தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு உறுதி அளித்தபடி, தரமான சேவை வழங்கு வதில்லை என, கூறப்படுகிறது.இது குறித்து, டிராய் அமைப்பின் தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:இம்மாத இறுதிக்குள், ‘மைகால்’ என, பெயரிடப்பட்டுள்ள மொபைல் ஆப் சேவை துவங்கப்படும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள், மொபைல் அழைப்புகளின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். குறைபாடு கண்டால், புகார் அளிக்கலாம். வாடிக்கையாளர்கள், நிறுவனங்களின் சேவைக்கு மதிப்பீடு வழங்கலாம். விரும்பாத அழைப்புகளை முற்றிலும் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|