பதிவு செய்த நாள்
07 மே2017
04:04
புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சிகோ, குளிர்பான விற்பனையில் பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இதன் துணை நிறுவனமான, பெப்சிகோ இந்தியா, உடனடியாக அருந்த கூடிய, ‘குவாக்கர் ஓட்ஸ் மில்க்’ என்ற, ஓட்ஸ் பால் விற்பனையை துவக்கியுள்ளது. இதன் மூலம், 1,300 கோடி டாலர் மதிப்புள்ள, இந்திய பால் பொருட்கள் சந்தையில் களமிறங்கி உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி தீபிகா வாரியர் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம், இந்திய சந்தையில், ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, சத்துள்ள பால் பொருட்கள் விற்பனையில் களமிறங்கி உள்ளது,’’ என்றார்.இந்தியாவில், அமைப்பு சார்ந்த பால் பொருட்களின் சந்தை மதிப்பு, 1,300 – 1,400 கோடி டாலர் என்றளவில் உள்ளது. பல சுவை உடைய பால், தயிர், மோர் உள்ளிட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் பங்கு, 100 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இது, ஆண்டுதோறும், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. வரும், 2021ல், இவற்றின் சந்தை, 330 கோடி டாலராக அதிகரிக்கும். இந்தியர்கள், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய பொருட்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால், இந்தியாவில், அமைப்பு சார்ந்த ஊட்டச்சத்து துறையின் சந்தை மதிப்பு, 2,000 – 2,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|