பதிவு செய்த நாள்
07 மே2017
04:05
புதுடில்லி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட, ஏழு பொதுத் துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளை, மத்திய அரசு, அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம், வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனராக இருக்கும், ஆர்.சுப்ரமணியகுமார், அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், 2019 ஜூன், 30 வரை, அந்த பதவியில் இருப்பார்.ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்சின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள, ஜி.ராஜ்கிரன் ராய், அதே பொறுப்புகளுடன், யூனியன் பேங்க் இந்தியாவுக்கு இடமாற்றப்பட்டு உள்ளார்.கார்ப்பரேஷன் வங்கியின் செயல் இயக்குனராக உள்ள சுனில் மேத்தா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பொறுப்பில் இருந்த, உஷா அனந்தசுப்ரமணியன், அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.தற்போது, கனரா வங்கியின் செயல் இயக்குனராக பணிபுரிந்து வரும் தீனபந்து மொஹாபத்ரா, பேங்க் ஆப் இந்தியாவின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனராக உள்ள, ஆர்.ஏ.சங்கர நாராயணன், விஜயா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.பேங்க் ஆப் இந்தியாவின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள, மெல்வின் ஓ ரெகோ, சிண்டிகேட் வங்கியில், அதே பொறுப்புக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|