பதிவு செய்த நாள்
07 மே2017
04:06
மும்பை : வங்கிகளின் வாராக்கடனை வசூலிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசர சட்டம், அமலுக்கு வந்துள்ளது.இதன் மூலம், மொத்த வாராக்கடனில், சரிபாதியை, வங்கிகள் விரைவாக வசூலிக்க வழி பிறந்துள்ளது.இது குறித்து, வங்கியாளர் ஒருவர் கூறியதாவது:கடந்த, 2016 டிச., இறுதி நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக்கடன், 7லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான கடனை, முன்னணியில் உள்ள, 50 கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளது.ரிசர்வ் வங்கி, புதிய அதிகாரம் மூலம், அந்த நிறுவனங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க, வங்கிகளுக்கு உத்தரவிட முடியும். அத்தகைய முயற்சிகள் பலனளிக்காத பட்சத்தில், அந்த நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, வங்கிகளை, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ளும்.திவால் நடவடிக்கையை தவிர்த்து, சமூக அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளவே, பெரும்பான்மையான நிறுவனங்கள் விரும்பும். அதனால், அவை, கடனை திரும்பச் செலுத்த முன்வரும். இதன் மூலம், மிக விரைவாக, குறைந்தபட்சம், 3 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை, வங்கிகளால் வசூலிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|