ரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன் ; ஜூலை வரை எஸ்.பி.ஐ., வட்டி சலுகைரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன் ; ஜூலை வரை எஸ்.பி.ஐ., வட்டி சலுகை ... புத்தபூர்ணிமா : நாணய சந்தைகளுக்கு விடுமுறை புத்தபூர்ணிமா : நாணய சந்தைகளுக்கு விடுமுறை ...
இந்தியாவில் புதுமையான முயற்சி: ஹரியானாவில் அமைகிறது ‘ஆட்டோ வில்லேஜ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
07:04

புதுடில்லி : இந்­தி­யா­வி­லேயே, முதன்­மு­றை­யாக, ஹரி­யா­னா­வில், 900 கோடி ரூபாய் முத­லீட்­டில், ‘ஆட்டோ வில்­லேஜ்’ என்ற, வாகன துறை­யின் அனைத்து பிரி­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய, வாகன கிரா­மம் அமைய உள்­ளது.இங்கு, 100 ஏக்­க­ருக்­கும் அதி­க­மான நிலப்­ப­ரப்­பில், பல்­வேறு வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின், 80 விற்­பனை மையங்­கள் இடம் பெறும். இவற்­றில், மோட்­டார் சைக்­கிள், ஸ்கூட்­டர், கார், வர்த்­தக வாக­னம், டிராக்­டர் உட்­பட, பல­த­ரப்­பட்ட வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­படும். மேலும், வாகன கடன் தரும் வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் கிளை­களும், இந்த கிரா­மத்­தில் அமைய உள்ளன.
அத்­து­டன், வாக­னத்தை ஓட்­டிப் பார்ப்­ப­தற்­கான, சோதனை வழித்­த­டங்­கள், வாங்­கிய வாக­னத்தை உட­ன­டி­யாக பதிவு செய்ய, வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கம் ஆகி­ய­வை­யும் இடம் பெற உள்ளன. புதிய வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த, பிரம்­மாண்ட கூடம், வாகன பழுது பார்ப்பு மையங்­கள், பெட்­ரோல் நிலை­யங்­கள், ஓட்­டல்­கள் ஆகி­ய­வற்­று­டன், பொழுது போக்கு பூங்­கா­வும், இந்த கிரா­மத்­தில் அமைய உள்­ளது. இந்த கிரா­மத்­திற்கு அரு­கி­லேயே, கூடு­த­லாக, 100 ஏக்­க­ருக்­கும் அதி­க­மான நிலப்­ப­ரப்­பில், குடி­யி­ருப்பு பகு­தி­யும் உரு­வாக்­கப்­பட உள்­ளது. வாகன கிரா­மத்­தில் பணி­யாற்­றும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்­காக, இந்த குடி­யி­ருப்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.
இது குறித்து, ‘ஆட்டோ வில்­லேஜ்’ நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் ஹிமான்ஷூ நாரா­யண் கூறி­ய­தா­வது: நகர்ப்­பு­றங்­களில், வாகன விற்­பனை நிலை­யம் அமைக்க, இடம் கிடைப்­பது கடி­ன­மாக உள்­ளது; வாட­கை­யும் அதி­க­மாக இருக்­கிறது. வெவ்­வேறு நிறு­வ­னங்­களின் வாக­னங்­களை பார்­வை­யிட்டு, தேர்வு செய்ய, பல இடங்­க­ளுக்கு அலைய வேண்­டி­யுள்­ளது. இந்த பிரச்­னை­க­ளுக்கு எல்­லாம் ஒரே தீர்­வாக, டில்­லி­யில் இருந்து, 100 கி.மீட்­ட­ருக்­குள் அமைய உள்ள, ஆட்டோ வில்­லேஜ் விளங்­கும். ‘இத்­திட்­டத்­திற்கு, ஒரு மாதத்­தில் அனு­மதி அளிக்­கப்­படும்’ என, ஹரி­யானா அரசு உறுதி அளித்­துள்­ளது.
அத்­து­டன், வாக­னத்­திற்­கான, ‘வாட்’ வரி, வாகன பதிவு கட்­ட­ணம் ஆகி­ய­வற்­றில் இருந்து விலக்கு அளிக்­க­வும், அர­சி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், நகர்ப்­பு­றங்­களில் வாக­னம் வாங்­கு­வோரை, வாகன கிரா­மத்­திற்கு ஈர்க்க முடி­யும் என, நம்­பு­கி­றோம். இத்­திட்­டத்­திற்கு நிலம் வழங்க, பலர் முன்­வந்­துள்­ள­னர். அடுத்த ஓரிரு மாதங்­களில், வாகன கிரா­மத்தை உரு­வாக்­கும் பணி துவங்க உள்­ளது. வரும், 2019 இறு­திக்­குள், அனைத்து பணி­களும் முடி­வ­டைந்து, கிரா­மம் பயன்­பாட்­டிற்கு வரும். ஒரே நாளில், வாக­னம் தொடர்­பான அனைத்து பணி­க­ளை­யும் முடித்துச் செல்­வ­தற்கு ஏற்ற இட­மாக, இந்த கிரா­மத்தை உரு­வாக்க உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.
காப்புரிமைஉ.பி., ராஜஸ்­தான், கோவா உள்­ளிட்ட மாநி­லங்­களும், இது போன்ற வாகன கிரா­மத்தை உரு­வாக்க விருப்­பம் தெரி­வித்து உள்ளன. ஹரி­யா­னா­வைத் தொடர்ந்து, இதர மாநி­லங்­க­ளி­லும் கள­மி­றங்க ஆலோ­சித்து வரு­கி­றோம். வாகன கிரா­மத்­திற்கு காப்­பு­ரிமை பெற உள்­ளோம்.-ஹிமான்ஷூ நாரா­யண், இயக்­கு­னர், ஆட்டோ வில்­லேஜ் நிறு­வ­னம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)