பதிவு செய்த நாள்
11 மே2017
08:17
மும்பை : எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், உலோகத்தை உருக்கும் போது வெளியேறும் கழிவில் இருந்து, சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்று மணலை தயாரித்துள்ளது.
ஆறுகளில் இருந்து, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால், நீர், மண்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன. இதனால், பல மாநில அரசுகள், மணல் அள்ளுவதற்கு தடை விதித்துள்ளன. இதையடுத்து, கட்டுமான வேலைகளுக்கான மணல் கிடைப்பது கடினமாகிறது. இந்நிலையில், ஆற்று மணலுக்கு பதிலாக, உலோகக் கழிவிலிருந்து மணல் போன்ற பொருளை, எஸ்ஸார் நிறுவனம் தயாரித்துள்ளது.
இது குறித்து, எஸ்ஸார் நிறுவன அதிகாரி திலீப் ஊமென் கூறியதாவது: எங்கள் நிறுவனம், இரும்புத் தாதுவில் இருந்து வெளியேறும் கழிவு மூலம், மணலை உற்பத்தி செய்கிறது. இது, சுற்றுச்சூழலை பாதிக்காது. இந்த மணலின் மூலம், அனைத்து விதமாக கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளலாம். கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மணல், இயற்கையில் கிடைக்கும் மணலை விட, தரமாக உள்ளது.ஆற்று மணலுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மும்பையை மட்டும் எடுத்துக் கொண்டால், நாளொன்றுக்கு, 1,500 லாரி மணல் தேவைப்படுகிறது. இதை எளிதாக, எங்கள் மாற்று மணலால் ஈடு செய்ய முடியும். குஜராத்தில் உள்ள ஹசிரா ஆலையில், இந்த மாற்று மணல் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|