பதிவு செய்த நாள்
11 மே2017
08:22
மும்பை : ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில், நன்கு பயிற்சி பெற்ற வல்லுனர்களின் பணிகளை செய்ய, ‘ஸ்மார்ட் மிஷின்கள் மற்றும் ரோபோக்கள்’ பயன்படுத்தப்படும்’ என, கார்ட்னர் பெல்லோ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: பல்வேறு துறைகளில், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ஸ்மார்ட் மிஷின்கள் மற்றும் ரோபோக்களின் பயன்பாடு பெருகி வருகிறது. குறிப்பாக, 2022ல், மருத்துவம், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், அதிக பயிற்சி பெற்ற வல்லுனர்கள் செய்யும் பல தரப்பட்ட பணிகளை, ஸ்மார்ட் மிஷின்கள், ரோபோக்கள் ஆகியவை, குறைந்த செலவில் முடித்துக் கொடுத்துவிடும்.
செயற்iகை நுண்ணறிவுதற்போது, உலகளவில், பல்வேறு தொழில்களுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாப்ட்வேர்களை உருவாக்குவது அதிகரித்து வருகிறது. இத்தகைய சாப்ட்வேர்களுக்கு ஏற்ப, தொழில் நிறுவனங்கள், அவற்றின் வணிகச் செயல்பாடுகளை அமைத்து, சிக்கலான பணிகளை, குறைந்த செலவில், சுலபமாக முடித்துக் கொள்கின்றன.இதன் காரணமாக, வருங்காலத்தில், சில தொழில்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும் என்ற போதிலும், பல துறைகள் இதனால் பயன் பெறும். நிறுவனங்கள், திரும்பத் திரும்ப ஒரே வகையான பணிகளை செய்வதற்கு, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களையும், தானியங்கி செயல்முறைகளையும் நாடும்.
சிக்கல்அதே சமயம், சவாலான விஷயங்களுக்கு தீர்வு காண்பது, சேவையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு, ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளும். செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், சாப்ட்வேர் கட்டளைப்படி, ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணியை மேற்கொள்கின்றன. ஆனால், மனிதர்கள், தீர்வு காண வேண்டிய பிரச்னைகளை கண்டுபிடிப்பதிலும், சிக்கலான பிரச்னைகளுக்கு, எந்த வகையில் தீர்வு காணலாம் என சிந்திப்பதிலும், திறமைசாலிகளாக உள்ளனர். அதனால், வருங்காலத்தில், இயந்திரங்களும், மனிதர்களும் பரஸ்பரம் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகும்.
எனினும், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிறுவனங்கள், சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உடனடியாக மாறுவதில் சிக்கலை சந்திக்க நேரும். அத்தகைய சூழலில், நிறுவனங்களுக்கு ஊழியர்களின் தயவு தேவைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காணாமல் போக வாய்ப்புதகவல் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக, ‘சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், உதவி மையம், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், அப்ளிகேஷன் சப்போர்ட்’ போன்ற பணிகளை, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் ஆக்கிரமிக்கும்; ஒருசில பணிகள் காணாமல் போகவும் வாய்ப்புண்டு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|