பதிவு செய்த நாள்
12 மே2017
06:24
புதுடில்லி : பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியதாவது: தொலை தொடர்பு சேவை துறை, அதிக வரிச்சுமையால் தத்தளிக்கிறது. ஸ்பெக்ட்ரம் உரிம கட்டணம், பயன்பாட்டு கட்டணம், சேவை வரிகள் என, பல்வேறு நெருக்கடியை, இத்துறை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டிற்கான விலை, வரலாறு காணாத வகையில் உள்ளது. இதையெல்லாம் எப்படி குறைத்து, சீராக்குவது என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான தவணைத் தொகை, வட்டி ஆகியவற்றை செலுத்துவதை தள்ளி வைக்க என்ன செய்யலாம் என, முடிவெடுக்க முடியாமல் திணறுகிறோம். இத்தகைய சூழலில், தொலை தொடர்பு துறை நிறுவனங்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, மத்திய அரசு, குழு அமைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பல்வேறு பிரச்னைகள் குறித்து, இக்குழு ஆராய்ந்து, விவேகமாக முடிவெடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். தகவல் பரிமாற்றம் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தொலை தொடர்பு துறை, ஆரோக்கியமான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|