பதிவு செய்த நாள்
12 மே2017
11:39
மும்பை : முக்கிய துறை பங்குகள் உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்த ஏறுமுகத்துடன் காணப்படுகின்றன. ஐடி, தொழில்நுட்பம், ஆட்டோ, உலோகம் ஆகிய துறைகளின் பங்குகளின் மதிப்பு குறிப்பிடப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகலில் வெளியிடப்பட உள்ள மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திகள் குறித்த புள்ளிவிபரம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விபரம் ஆகியனவும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோ கார்ப், விப்ரோ, ஓஎன்ஜிசி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 12, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 48.76 புள்ளிகள் உயர்ந்து 30,299.74 புள்ளிகளாகவும், நிப்டி 15.35 புள்ளிகள் உயர்ந்து 9,437.75 புள்ளிகளாகவும் உள்ளன. கடந்த 4 நாட்களில் சென்செக்ஸ் 392.18 புள்ளிகள் உயர்ந்ததுடன், தொடர்ந்து 30,000 புள்ளிகளுக்கும் மேலாகவே உள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|