பதிவு செய்த நாள்
13 மே2017
00:03
வியன்னா : ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், ‘பிக்கி’ மற்றும் இந்திய – ஆஸ்திரிய துாதரகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தொழிலதிபர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது: இந்தியா, மின்சார வாகனத் தயாரிப்பை ஊக்குவித்து, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, ‘நிடி ஆயோக்’ சில யோசனைகளை முன்வைத்துள்ளது. இது குறித்து, கனரக தொழில் உள்ளிட்ட அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். உள்நாட்டில் மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், புதிய மின்சார வாகன கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
வரும், 2030ல், நாடு முழுவதும் மின்சார கார்களின் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம். குறிப்பாக, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பொது துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என, அரசு விரும்புகிறது. மின்சார வாகனங்களுக்கான வாடகை கட்டணம், தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்காத வகையில், அரசு பார்த்துக் கொள்ளும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|