பதிவு செய்த நாள்
13 மே2017
00:04
புதுடில்லி : ‘ஸ்நாப்டீல்’ நிறுவனத்தை, ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, நெக்சஸ் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனம், பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பல மாதங்களாக, இப்பிரச்னையில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
போட்டிஸ்நாப்டீல் நிறுவனத்தில், ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க், 30 சதவீத பங்கு முதலீட்டை வைத்துள்ளது. அதுபோல, நெக்சஸ் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ், 10 சதவீதம்; கலாரி நிறுவனம், 8 சதவீத பங்குகளை வைத்துள்ளன.இந்நிலையில், மின்னணு வணிகத்தில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், ஸ்நாப்டீல் திணறியது. இதையடுத்து, ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மதிப்பை, 650 கோடி டாலரில் இருந்து, 150 கோடி டாலராக, சாப்ட்பேங்க் குறைத்தது. அத்துடன், ஸ்நாப்டீல் நிறுவனத்தை, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் முடிவு செய்தது.
உடன்பாடுஆனால், குறைந்த மதிப்பில் ஸ்நாப்டீல் நிறுவனத்தை விற்பனை செய்ய, நெக்சஸ் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் மறுத்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த வாரம் நடைபெற்ற ஸ்நாப்டீல் இயக்குனர் குழு கூட்டமும், எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது. இந்நிலையில், இப்பிரச்னையில் சாப்ட்பேங்க், நெக்சஸ் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ், கலாரி நிறுவனங்கள் இடையே, உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், ஸ்நாப்டீல் நிறுவனர்களுக்கு, தலா 3 கோடி டாலர்; நெக்சஸ் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு, 8 கோடி டாலர் மற்றும் ஒன்றிணைந்த நிறுவனத்தில் குறிப்பிட்ட பங்குகள் கிடைக்கும் என, தெரிகிறது. கலாரி நிறுவனம், 7 – 8 கோடி டாலர் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|