பதிவு செய்த நாள்
14 மே2017
02:14
மும்பை : ஸ்டோனெக்ஸ் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.ஸ்டோனெக்ஸ் இந்தியா, வீடுகளில் பயன்படுத்த கூடிய, மார்பிள் கற்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நாடு முழுவதும், தன் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர், கவ்ரவ் அகர்வால் கூறியதாவது:சொகுசு குடியிருப்பு, வணிக மற்றும் அலுவலக கட்டடங்களில், இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கற்களுக்கு, அதிக தேவை காணப்படுகிறது. இந்தியாவில், இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கற்களின் சந்தை மதிப்பு, 5,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இது, அடுத்த, 10 ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.இறக்குமதி மார்பிள் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 10 சதவீதம். ஸ்டோனெக்ஸ், மார்பிள் கற்களை, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் கற்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிஷன்கார் என்ற இடத்தில், பாலிஷ் செய்யப்படுகிறது.அடுத்த இரு ஆண்டுகளில், இந்தியாவில், 10 கடைகள் துவக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், வருவாயும், 500 கோடி ரூபாயாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|