டிஷா மைக்ரோபின் நிறுவனத்திற்கு ஸ்மால் பேங்க் துவங்க அனுமதிடிஷா மைக்ரோபின் நிறுவனத்திற்கு ஸ்மால் பேங்க் துவங்க அனுமதி ... சொந்த வீடு வாங்க ஏற்ற நேரம் இதுவா? சொந்த வீடு வாங்க ஏற்ற நேரம் இதுவா? ...
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தள்ளி வைப்பு மூத்த அதிகாரிகளுக்கு அதுவும் இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2017
02:20

பெங்களுரு : இந்­திய ஐ.டி., துறை­யில் இரண்­டா­வது இடத்­தில் உள்ள, இன்­போ­சிஸ் நிறு­வ­னம், அதன் ஊழி­யர்­க­ளுக்­கான ஊதிய உயர்வை தள்ளி வைத்­துள்­ளது. மூத்த அதி­கா­ரி­க­ளுக்கு ஊதிய உயர்வு அறி­விக்­கப்­ப­ட­வில்லை.அமெ­ரிக்­கா­வின் ‘எச் –1பி’ விசா கட்­டுப்­பாடு, ‘பிரெக்­ஸிட்’ உள்­ளிட்ட சர்­வ­தேச பிரச்­னை­களின் தாக்­கம் போன்­றவை, இந்­திய ஐ.டி., நிறு­வ­னங்­களை பாதித்­துள்ளன.இதன் கார­ண­மாக, பல நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்பு உள்­ளிட்ட சிக்­கன நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளன.இந்த வகை­யில், இன்­போ­சிஸ் நிறு­வ­ன­மும், ஏரா­ள­மா­னோரை, உரிய இழப்­பீடு வழங்கி, பணி நீக்­கம் செய்ய உள்­ள­தாக தக­வல் வெளி­யா­னது. இது, இன்­போ­சிஸ் ஊழி­யர்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இந்­நி­லை­யில், இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் தலைமை செயல்­பாட்டு அதி­காரி யு.பி.பிர­வின்­ராவ், அனைத்து பணி­யா­ளர்­க­ளுக்­கும், நேற்று முன்­தி­னம், மின்­னஞ்­சல் அனுப்­பி­யுள்­ளார்.அதன் விப­ரம்:நிறு­வ­னம், கடு­மை­யான சூழலை எதிர்­கொண்­டுள்­ளது. இதை சமா­ளிக்க, ஊழி­யர்­க­ளா­கிய உங்­களின் ஆத­ரவு தேவை. கடந்த நிதி­யாண்டு, நமக்கு மிகுந்த சவா­லாக இருந்­ததை நீங்­கள் அறிந்­தி­ருப்­பீர்­கள். குறிப்­பாக, நான்­காம் காலாண்­டில், நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­கள், மதிப்­பீட்டை விட குறை­வாக இருந்­தது உங்­க­ளுக்கு தெரி­யும். ஒட்­டு­மொத்த ஐ.டி., துறை­யும், கடும் சவாலை சந்­தித்து வரு­கிறது. நமக்கு மிக முக்­கி­ய­மாக உள்ள சேவை­கள் வர்த்­த­கத்தை, வணி­க­ம­ய­மாக்­கும் முயற்சி நடை­பெற்று வரு­கிறது. இத்­து­டன், சர்­வ­தேச அர­சி­யல் நில­வ­ரங்­களும், நமது பாரம்­ப­ரிய வர்த்­த­கத்­திற்கு இடை­யூ­றாக உள்ளன. இவற்­றை­யெல்­லாம், உங்­கள் ஆத­ர­வு­டன் நிறு­வ­னம் முறி­ய­டிக்­கும் என்ற நம்­பிக்கை உள்­ளது. மீண்­டும் எழுச்சி பாதைக்கு திரும்ப, நாம் கடு­மை­யாக உழைத்து வரு­கி­றோம். இத்­த­கைய தரு­ணத்­தில், நிறு­வ­னம், ஏரா­ள­மா­னோரை பணி நீக்­கம் செய்ய உள்­ள­தாக கூறப்­படும் ஊக செய்­தி­க­ளுக்கு, முற்­றுப்­புள்ளி வைக்க விரும்­பு­கி­றேன்.வழக்­க­மான நடை­மு­றைப்­படி, ஊழி­யர்­களின் செயல்­பா­டு­கள் மதிப்­பீடு செய்­யப்­பட்டு, சரி­வர செயல்­ப­டாத சிலர் மட்­டுமே பணி­யில் இருந்து விடு­விக்­கப்­ப­டு­வர்.இழப்­பீட்­டு­டன் பணி நீக்­கம் செய்­யும் திட்­டம் எது­வும் நிறு­வ­னத்­தி­டம் இல்லை. இத்­த­கைய சவா­லான சூழ­லில், நிறு­வ­னம், 1.70 லட்­சம் இள­நிலை ஊழி­யர்­க­ளுக்­கான ஊதிய உயர்வை, ஏப்­ரல் மாதத்­தில் இருந்து, ஜூலைக்கு தள்ளி வைத்­து உள்­ளது.

பணியாளர்கள் பீதிஇன்­போ­சிஸ், 30 ஆயி­ரம் மூத்த பணி­யா­ளர்­களில், மூவா­யி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோரை, ‘பணி­யில் அபி­வி­ருத்தி தேவை’ என்ற பிரி­விற்கு மாற்­றி­யுள்­ளது.மேலும், பணி மேம்­பாடு தொடர்­பாக, மூவா­யி­ரம் இள­நிலை பணி­யா­ளர்­க­ளுக்கு நோட்­டீஸ் கொடுத்­துள்­ளது. அத­னால், நடப்­பாண்டு, இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தில், ஆறா­யி­ரம் பேர் பணி நீக்­கம் செய்­யப்­பட உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி, பணி­யா­ளர்­க­ளி­டம் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.மூத்த அதி­கா­ரி­கள் குறித்து, அடுத்து வரும் காலாண்­டு­களில் முடிவு செய்­யப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)