ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தள்ளி வைப்பு மூத்த அதிகாரிகளுக்கு அதுவும் இல்லைஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தள்ளி வைப்பு மூத்த அதிகாரிகளுக்கு அதுவும் ... ... நிதி இழப்­பு­களை ஈடு செய்­வது எப்­படி? நிதி இழப்­பு­களை ஈடு செய்­வது எப்­படி? ...
சொந்த வீடு வாங்க ஏற்ற நேரம் இதுவா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
06:16

குறைந்த விலை, குறை­வான வட்டி விகிதம், உயரும் வரு­மானம் மற்றும் அரசின் சலு­கைகள் என பல்­வேறு கார­ணங்­க­ளினால் சொந்த வீடு வாங்­கு­வ­தற்­கான சிறந்த தருணம் தற்­போது நில­வு­வ­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகிதம் குறை­வாக இருக்­கி­றது. 2008ம் ஆண்­டுக்கு பிறகு வட்டி விகிதம் இந்த அள­வுக்கு குறை­வாக இருந்­த­தில்லை என வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். அண்­மையில் ஸ்டேட் வங்கி, 30 லட்சம் ரூபாய் வரை­யி­லான வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகி­தத்தை, 8.35 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. வட்டி விகிதம் ஏற்­க­னவே குறை­வா­ன­தாக இருக்­கி­றது. கடந்த இரண்டு ஆண்­டு­களில் வங்­கி­களின் வட்டி விகிதம், 150 அடிப்­படை புள்­ளிகள் குறைந்­தி­ருக்­கின்­றன. வட்டி விகித குறைவு வாங்கும் சக்­தியை அதி­க­மாக்­கி­யுள்­ளது. 100 அடிப்­படை புள்ளி அள­வி­லான வட்டி குறைப்பு விலையில், 5 முதல் 6 சத­வீத விலை குறைப்­புக்கு வழி­வ­குக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

வட்டி விகித போக்கு இதை விட குறை­வாக செல்லும் வாய்ப்­பில்லை என்று கரு­தப்­ப­டு­கி­றது. மேலும் அண்மை காலங்­களில் வீடு­களின் விலை உய­ராமல் இருப்­பதால், விலையில் கரெக் ஷன் நிகழ வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விலையில் தள்­ளு­படி உள்­ளிட்ட சலு­கை­களும் கிடைக்க வாய்ப்­புள்­ளது. நொய்டா, மும்பை, கோல்­கட்டா, பெங்­க­ளூரு, புனே, சென்னை உள்­ளிட்ட நக­ரங்­களில் நான்காம் காலாண்டில் வீடு­களின் விலை, 1.67 சத­வீதம் குறைந்­தி­ருப்­ப­தாக பிராப் ஈக்­விட்டி நிறு­வனம் தெரி­விக்­கி­றது.

பெரு நக­ரங்­களில் பிரீ­மியம் குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான விலை கடந்த ஓராண்­டாக உய­ராமல் தட்­டை­யாக இருப்­ப­தாக சர்­வ­தேச புரோக்­கரேஜ் நிறு­வ­ன­மான, சி.எல்.எஸ்.ஏ., தெரி­விக்­கி­றது. அதே நேரத்தில் கடந்த மூன்­றாண்­டு­களில் வீடு­களின் விலை உயர்வை விட வரு­மான உயர்வு அதி­க­மாக இருப்­ப­தா­கவும், 2005ம் ஆண்­டுக்குப் பிறகு வீடு­களை வாங்க கூடிய வசதி தற்­போது மேம்­பட்­டி­ருப்­ப­தா­கவும், சி.எல்.எஸ்.ஏ., அறிக்கை தெரி­விக்­கி­றது. வீடு வாங்­கு­ப­வர்­களை பொருத்­த­வரை வீடு வாங்க இது உகந்த நேர­மாக கரு­தலாம் என்­கின்­றனர். மேலும், அரசு அறி­வித்­துள்ள சலுகை திட்­டங்­களும் சாத­க­மான அம்­ச­மாக அமைந்­துள்­ளன.

குறைந்த விலை பிரிவு வீடு­க­ளுக்கு பட்­ஜெட்டில் உள்­கட்­ட­மைப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு, முதல் முறை வீடு வாங்­கு­ப­வர்­க­ளுக்­கான வட்டி மானி­யமும் அளிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கான வரு­மான வரம்பும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து கட்­டு­மான நிறு­வ­னங்­களும் குறைந்த விலைப்­பி­ரிவு வீடு­களில் அதிக கவனம் செலுத்த துவங்­கி­யுள்­ளன. இந்த அம்­சங்­க­ளோடு, வீடு வாங்­கு­ப­வர்­களின் நலன் காக்கும் வகை­யி­லான அம்­சங்­களை கொண்ட ரியல் எஸ்டேட் ஒழுங்­கு­முறை சட்­டமும் அம­லுக்கு வந்­துள்­ளது. இது சாத­க­மான பல மாற்­றங்­களை கொண்டு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)