பதிவு செய்த நாள்
17 மே2017
21:22
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஹட்கோ, ‘மினி நவரத்தினா’ அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம், கடந்த, 8ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பங்கு ஒன்றின் விலை, 56 – 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. பங்குகள் வேண்டி, 80 மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. இவ்வெளியீட்டின் மூலம், ஹட்கோ, 1,224 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது.
இப்பங்குகள், நாளை, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளதாக, ஹட்கோ தெரிவித்துள்ளது. 2016 டிச., இறுதி நிலவரப்படி, இந்நிறுவனம், வீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு, 36,385 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. அதில், நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, 69 சதவீத கடன்; வீட்டுவசதி துறைக்கு, 31 சதவீத கடன் வழங்கப்பட்டு உள்ளன. சமீபத்தில், அவின்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, 104 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|