பதிவு செய்த நாள்
17 மே2017
21:29
புதுடில்லி : லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்த, இந்திய வர்த்தக துறை செயலர் ரீதா தியோதியா தலைமையிலான குழு, அந்நாடுகளில் பயணம் மேற்கொண்டு உள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சியில், இக்குழுவானது, ஈக்வடார், கொலம்பியா ஆகிய நாடுகளில், மே, 20 வரை பயணம் மேற்கொள்கிறது.
இது குறித்து, மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா – ஈக்வடார் நாடுகளுக்கு இடையில், பரஸ்பர வணிகத்தை அதிகரிப்பது தொடர்பாக, 2015 அக்., மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் வர்த்தக துறை செயலர் தலைமையில், இந்தியாவில் இருந்து, மருந்து, ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், ரயில்வே, தொலை தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சென்றுள்ளனர்.
கொலம்பியாவில், ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகள் செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக அடுத்து, மெக்சிகோ, சிலி, பெரு போன்ற நாடுகளுடனும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|