பதிவு செய்த நாள்
19 மே2017
02:20
புதுடில்லி : மத்திய ஜவுளி அமைச்சகத்தின் இணை செயலர் சுப்ரதா குப்தா கூறியதாவது:இந்தியாவிடம் ஜவுளி உற்பத்தித் திறன் அபரி மிதமாக உள்ளது. ஆனால், ஜப்பானுக்கான ஜவுளி ஏற்றுமதி மிகக் குறைவாகவே உள்ளது. ஜப்பானியர்களுக்கு தேவையான ஜவுளிகள், தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.அதனால், ஜப்பானுக்கு தேவையான ஜவுளிகள்; அந்நாட்டினர் விரும்பும் தரத்தில், ஜவுளிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்திய ஜவுளித் துறையினர் அறிந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட உள்ளது.இதற்காக, ஜப்பான் ஜவுளி பொருட்கள் தரம் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன், விரைவில், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.இதன் மூலம், ஜப்பானுக்கு எந்த வகையான ஜவுளி வகைகளை, தரமான முறையில் தயாரித்து ஏற்றுமதி செய்யலாம் என்பது குறித்த பயிற்சியை, இந்திய ஜவுளித் துறையினர் பெறுவர். இது, ஜப்பானுக்கான ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|