பதிவு செய்த நாள்
19 மே2017
02:22
மும்பை : ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தாண்டு இறுதியுடன் கார் விற்பனையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம், 1995ல், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தின் ஹலோல் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை துவங்கியது. இதன் ‘ஒபல்’ வகை கார்களுக்கு அப்போது நல்ல மவுசு இருந்தது.ஆனால், மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோடா போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், ‘ஸ்பார்க், பீட்’ போன்ற சிறிய ரக கார்களின் தயாரிப்பில் இறங்கியது.இவையும், பெரிய அளவில் நிறுவனத்திற்கு கைகொடுக்கவில்லை. கடந்த மாதம் ஹாலோல் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, மஹாராஷ்டிராவில், புனே அருகில் உள்ள தாலேகான் தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறுகிறது.‘‘இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால், கார் விற்பனை, இந்தாண்டு இறுதியுடன் நிறுத்தப்படும். ஏற்றுமதி மட்டும் மேற்கொள்ளப்படும். அதேசமயம், கார் உதிரிபாகங்கள் விற்பனை, பழுது பார்ப்பு சேவை ஆகியவை தொடரும்,’’ என, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் காஹர் காசம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|