பதிவு செய்த நாள்
19 மே2017
02:22
புதுடில்லி: அப்பல்லோ டயர்ஸ், நடப்பாண்டில், 2,500 கோடி ரூபாயை, மூலதன செலவாக செய்ய உள்ளது.அப்பல்லோ டயர்ஸ், மோட்டார் வாகன டயர் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டில், சமீபத்தில், புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. விரைவில், ஆந்திராவிலும் புதிய ஆலையை அமைக்க உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை நிதி செயல்பாட்டு அலுவலர் கவ்ரவ் குமார் கூறியதாவது:சர்வதேச அளவில், இருசக்கர வாகனம் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு, தேவை அதிகரித்து வருகிறது. எனவே, எங்கள் நிறுவனம், டயர் விற்பனையை அதிகரிக்க உள்ளது. தற்போது, அப்பல்லோ டயர்ஸ், மாதந்தோறும், ஒரு லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு டயர்களை உற்பத்தி செய்கிறது. டயர் உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துஉள்ளது.இதனால், எங்கள் நிறுவனம், டயர்களின் விலையை உயர்த்த உள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், மூலதன செலவாக, 2,500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. ஆந்திராவில் அமைய உள்ள ஆலையில், அனைத்து வகை டயர்களும் உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|