ரூ.2,500 கோடி மூலதன செலவு அப்பல்லோ டயர்ஸ் திட்டம்ரூ.2,500 கோடி மூலதன செலவு அப்பல்லோ டயர்ஸ் திட்டம் ... சரிவிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு : ரூ.64.68 சரிவிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு : ரூ.64.68 ...
அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மேலும் தளர்த்த மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2017
02:23

புதுடில்லி : பத்­தி­ரிகை, கட்­டு­மா­னம், சில்­லரை விற்­பனை ஆகிய துறை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை மேலும் தளர்த்த, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது.அடுத்த ஐந்து ஆண்­டு­களில், சாலை­கள், துறை­மு­கங்­கள், விமான நிலை­யங்­கள் போன்ற, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, 1 லட்­சம் கோடி டாலர் தேவைப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத்­தொ­கையை திரட்ட, அன்­னிய முத­லீடு இன்­றி­ய­மை­யா­தது என்­ப­தால், அதற்­கான விதி­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரு­கின்றன.அன்­னிய நேரடி முத­லீடு அதி­க­ரிக்­கும்­பட்­சத்­தில், டாலர் உள்­ளிட்ட அன்­னிய செலா­வ­ணி­க­ளுக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு உய­ரும். இதன் மூலம், வெளி­நா­டு­க­ளுக்கு, இந்­தியா அளிக்க வேண்­டிய தொகை குறை­யும் என்­ப­தால், நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை குறை­யும்.இது போன்ற கார­ணங்­க­ளால், மத்­திய அரசு, பல்­வேறு துறை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு கட்­டுப்­பா­டு­களை, மெல்ல தளர்த்தி வரு­கிறது.பத்­தி­ரிகைஇந்த வகை­யில், பத்­தி­ரிகை, கட்­டு­மா­னம் மற்­றும் சில்­லரை விற்­ப­னையில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­களை மேலும் தளர்த்த, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது. தற்­போது, செய்தி பத்­தி­ரிகை, அறி­வி­யல் இதழ் ஆகி­ய­வற்­றின் வெளி­யீ­டு­களில், அரசு அனு­ம­தி­யு­டன், 26 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டுக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இது, 49 சத­வீ­த­மாக உயர்த்­தப்­படும் என, தெரி­கிறது.இதன் மூலம், அயல்­நாட்டு பத்­தி­ரிகை நிறு­வ­னங்­கள், இந்­திய பத்­தி­ரிகை நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.கட்­டு­மா­னம்கட்­டு­மான துறை­யில், சில நிபந்­த­னை­க­ளு­டன், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இதில், இந்­திய கட்­டு­மான நிறு­வ­னங்­கள், சாலை, குடி­நீர், கழி­வு­நீர் உள்­ளிட்ட, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் உள்ள மனை திட்­டங்­க­ளுக்கு மட்­டுமே, அன்­னிய நேரடி முத­லீட்டை திரட்ட வேண்­டும் என்ற நிபந்­தனை உள்­ளது.இதை தளர்த்தி, இன்­னும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் செய்­யப்­ப­டாத மனை திட்­டங்­க­ளுக்கு கூட, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை பெறு­வ­தற்கு அனு­மதி தரப்­படும் என, தெரி­கிறது.சில்­லரை விற்­பனை‘சிங்­கிள் பிராண்டு’ எனப்­படும், ஒரு நிறு­வ­னத்­தின் பொருட்­களை சில்­ல­ரை­யில் விற்­பனை செய்­யும் தொழி­லில், தற்­போது, அரசு அனு­ம­தி­யின்றி, 49 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்டை மேற்­கொள்­ள­லாம். அதற்கு மேற்­பட்ட முத­லீ­டு­ க­ளுக்கு, அரசு அனு­மதி தேவை.இந்த நிபந்­த­னையை தளர்த்தி, அரசு ஒப்­பு­தல் இன்றி, 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்டை பெற, அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.‘மல்டி பிராண்டு’ எனப்­படும், பல்­வேறு நிறு­வ­னங்­களின் பொருட்­களை, சில்­ல­ரை­யில் விற்­பனை செய்­யும் தொழி­லில், பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­களை தயா­ரித்து, விற்­பனை செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்­கான அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை தளர்த்தி, அந்­நி­று­வ­னங்­கள், உணவு சாரா பொருட்­க­ளை­யும் விற்க அனு­மதி வழங்­கு­வது குறித்து, பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)