பதிவு செய்த நாள்
19 மே2017
10:38
மும்பை : சர்வதேச சந்தைகளின் நெருக்கடி காரணமாக நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (மே 19) சரிவிலிருந்து மீண்டுள்ளன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதன் முன்னோட்டமாக பொருட்களின் விலை மற்றும் வரி விகிதத்தை அரசு முடிவு செய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 208.82 புள்ளிகள் உயர்ந்து 30,643.61 புள்ளிகளாகவும், நிப்டி 57.45 புள்ளிகள் உயர்ந்து 9486.90 புள்ளிகளாகவும் உள்ளன.
அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியதால், ஆசிய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. நிலக்கரி, மின்சாத மற்றும் மின் உற்பத்தி பொருட்களின் விலை ஜிஎஸ்டி.,யால் குறைக்கப்பட உள்ளதால் பெரும்பாலான துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. ஐடிசி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக அளவு லாபம் ஈட்டி உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|