பதிவு செய்த நாள்
19 மே2017
15:29
புதுடில்லி : வீட்டு கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைக்க பல முன்னணி வங்கிகள் முடிவு செய்துள்ளன. வீட்டுவசதி நிதியை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.30 லட்சம் வரை வங்கி கடன் பெறும் மாத சம்பள தாரர்களுக்கு 8.35 சதவீத வட்டியும், சுயதொழில் புரிவோருக்கான வீட்டு கடன் வட்டி விகிதம் 8.40 சதவீதமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டிவிகித மாற்றம் மே 16 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுகடனுக்கான வட்டியை 30 அடிப்படை கொள்கைகளின் கீழ் குறைத்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஹச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் - ரூ.30 லட்சம் வரை வீட்டு கடன் பெறுவோரில் பெண்களுக்கு ரூ.8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதமும் வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு 8.50 சதவீதம் வட்டியும், ரூ.75 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுக் கடனுக்கு 8.55 சதவீதமும் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மே 8 ம் தேதி எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுகடன் வட்டி 25 அடிப்படை கொள்கைகளின்படி 8.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|