பதிவு செய்த நாள்
19 மே2017
16:11
புதுடில்லி : 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட தொகை ரூ.5.3 லட்சம் கோடி (தோராய மதிப்பு). இவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து விடலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கழகம் சமீபத்தில் கறுப்பு பணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1200 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், வறண்ட மற்றும் வெள்ளம் பாயும் நதிகளை இணைப்பதற்காக நீர்வளத்துறை கணக்கிட்டுள்ள தொகை ரூ.5.6 லட்சம் கோடி. 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.5.3 லட்சம் கோடி. இந்த தொகையை மீட்டாலே இந்திய நதிகளை இணைத்து விடலாம்.
2009-10 ம் ஆண்டுகளில் பதுக்கப்பட்ட ரூ.46,200 கோடியை மீட்டால் மருந்து துறையை முன்னேற்றலாம். 2010 ம் ஆண்டில் பதுக்கப்பட்ட ரூ.2.3 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டால் சாலை, ரயில்வே, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளை நவீன மயமாக்குவதற்கான பட்ஜெட் தொகை கிடைத்து விடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|