பதிவு செய்த நாள்
20 மே2017
07:19
மும்பை:உலகையே அச்சுறுத்தி வரும், ‘வான்னக்ரை’ வைரஸ் பிரச்னையை தொடர்ந்து, ‘அனைத்து வங்கிகளும், தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் தலைமை நிதி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கித் துறையில், தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால், இடர்ப்பாடுகளுக்கான வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இடர்ப்பாடுகளை அடையாளம் காணவும், அவற்றை தடுத்து, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும், தனி அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.
அதனால், வங்கிகள், தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற இரு பணியிடங்களை ஏற்படுத்தி, ஆட்களை நியமிக்க வேண்டும். தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு, பொறியியல் பட்டதாரி அல்லது எம்.சி.ஏ., படித்தவர்களை நியமிக்கலாம். தலைமை நிதி அதிகாரிக்கு, 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள, பட்டயக் கணக்காளர்களை தேர்வு செய்ய வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.காதி துறையில் 5 ஆண்டுகளில்5 கோடி பேருக்கு வேலைமும்பை:‘‘மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், காதி துறையில், ஐந்து கோடி ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளது’’ என, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:சூரிய சக்தியில் இயங்கும் நுாற்பாலைகளை அமைக்க, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையமான – கே.வி.ஐ.சி., திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டு களில், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.ஜவுளித் துறையில் காதியின் பங்களிப்பு, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, அரசு எடுத்த நடவடிக்கைகளால், 2014ல், 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த விற்பனை, தற்போது, 52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களில், காதி ஆடைகளை, நவ நாகரிக வடிவமைப்பில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, நாடு முழுவதும் காதி துறைக்கு, 7,000 விற்பனை மையங்கள் உள்ளன.இத்துறையை, கணினி மயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|