பதிவு செய்த நாள்
20 மே2017
15:12
புதுடில்லி : ஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் மென்பானங்களின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர உள்ளது.
ஜிஎஸ்டி.,யில் மென்பானங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் வரிவிதிப்பில் கீழ் வருவதால் ஆயுர்வேத தயாரிப்புக்களின் விலை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர உள்ளது. ஜிஎஸ்டி.,யால் வரி உயர்வதால் ரூ.22,000 கோடி மதிப்பிலான மென்பான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மென்பானங்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை அளவு வெகுவாக குறையும் எனவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மென்பானங்கள் மீதான வரி 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மென்பான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக கொக்ககோலா, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|