பதிவு செய்த நாள்
21 மே2017
06:55
புதுடில்லி: டாபர் இந்தியா நிறுவனம், தேன், பற்பசை உள்ளிட்ட நுகர்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தென் ஆப்ரிக்காவில், டாபர் தென் ஆப்ரிக்கா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தற்போது, டாபர் தென் ஆப்ரிக்கா, அந்நாட்டில், தனிநபர் பயன்படுத்தும் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள, இரு நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இது குறித்து, டாபர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எங்கள் நிறுவனம், கடந்த ஆண்டு, தென் ஆப்ரிக்காவில், எப்.எம்.சி.ஜி., விற்பனையில் ஈடுபட்டுள்ள டிஸ்காரியா டிரேடிங் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது. கடந்த ஏப்ரலில், கேசப் பராமரிப்பு, தனிநபர் பொருட்கள் துறையில் உள்ள, சி.டி.எல்., குழுமத்தை வாங்கியது. தற்போது, டி அண்டு ஏ காஸ்மெட்டிக்ஸ், அட்லாண்டா பாடி அண்டு ஹெல்த் புராடெக்ட் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், கேசப் பராமரிப்பு உள்ளிட்ட தனிநபர் பொருட்கள் விற்பனையில், அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|