பதிவு செய்த நாள்
21 மே2017
06:57
மும்பை:பி.எம்.ஐ., இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:புராஜெக்ட் மேனேஜர்கள் எனப்படும், திட்ட மேலாளர்களுக்கான தேவை பெருகி வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில், சர்வதேச வேலைவாய்ப்பு வளர்ச்சியை விஞ்சும் வகையில், திட்ட மேலாளர்கள் வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்கும்.குறிப்பாக, இந்தியாவில், அதிக ஊதியத்துடன், லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியாவில், 70 லட்சத்திற்கும் அதிகமான, புதிய திட்ட மேலாளர்கள் தேவைப்படுவர். உலகளவில், திட்ட மேலாண்மை சார்ந்த வேலைவாய்ப்பில், இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, தயாரிப்பு, கட்டுமானம், தகவல் சேவைகள், தொழில்நுட்பம், அச்சுத்துறை, நிதி, காப்பீடு ஆகிய துறைகளில், திட்ட மேலாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.உலகளவில், இந்தியா, 2027ல், திட்ட மேலாண்மை சார்ந்த, 218 லட்சம் வேலைவாய்ப்புகளுடன், இரண்டாவது இடத்தை பிடிக்கும். சீனா, 460 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் முதலிடத்தில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|