பதிவு செய்த நாள்
21 மே2017
07:03
புதுடில்லி: புதிய, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில், வலைதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிக நிறுவனங்கள், சப்ளையர்களிடம் இருந்து, 1 சதவீதம், டி.சி.எஸ்., எனப்படும், மூல வரி வசூலிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வோர், 1 சதவீதம் மூல வரியை செலுத்த வேண்டும்.
இது குறித்து, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா கூறுகையில், ‘‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள், அவற்றின் வலைதளம் மூலம் பொருட்களை சப்ளை செய்வோருக்கு அளிக்கும் தொகையில், 1 சதவீத மூல வரியை பிடித்தம் செய்ய வேண்டும்,’’ என, தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: மின்னணு வணிகத் துறை வளர்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., உதவும். இது, ஒரு மாநிலத்தில் இருந்து, பிற மாநிலங்களில் பொருட்களை விற்பதில், தற்போது உள்ள பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். குறிப்பாக, மின்னணு வணிக நிறுவனங்களின் பொருட்களுக்கு, சில மாநிலங்கள் விதித்துள்ள நுழைவு வரி பிரச்னைக்கு, ஜி.எஸ்.டி., முடிவு கட்டும். நிறுவனம், வாடிக்கையாளர் நலனை பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார். மின்னணு வணிக நிறுவனங்கள், பொருட்கள் விற்பனையில், மூல வரியை பிடித்தம் செய்தால், அந்த பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு, ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் முடங்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வரி பிடித்தம் காரணமாக, பொருட்களை வாங்குவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம், வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி வசூலில் மேலும் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் உதவும் என, வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|