பதிவு செய்த நாள்
21 மே2017
07:07
பெங்களூரு: அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட, ஐபோன் எஸ்.இ., ஸ்மார்ட் போன் விற்பனையை, சோதனை முயற்சியாக சில கடைகளில் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ஆப்பிள் நிறுவனம், 4 அங்குல தொடு திரையுடன், அடிப்படை வசதிகள் கொண்ட, ஐபோன் எஸ்.இ., ஸ்மார்ட் போன் உற்பத்தியை, இம்மாத இறுதியில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிறுவனத்திற்கு, ஐபோனை தயாரித்து அளிக்கும், தைவானைச் சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலையில், ஐபோன் எஸ்.இ., உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், இதன் விலை குறைவாக இருக்கும் என, கூறப்பட்டது.
ஆனால், இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஐபோன் எஸ்.இ., ஸ்மார்ட் போன் விற்பனையை, குறிப்பிட்ட சில கடைகளில், ஏற்கனவே துவங்கி உள்ளதாக, தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தொழில் துவங்கும் அன்னிய நிறுவனங்கள், தயாரிப்பில், 30 சதவீதம் அளவுக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். இந்த நிபந்தனையை தளர்த்துமாறு, ஆப்பிள் நிறுவனம் விடுத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், விஸ்ட்ரான் மூலம், ஐபோன் விற்பனையை ஆப்பிள் துவக்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|