பதிவு செய்த நாள்
21 மே2017
07:12
மும்பை: டாடா குழுமத்தைச் சேர்ந்த, ஸ்டார் பஜார் நிறுவனம், மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஸ்டோர்களின் எண்ணிக்கையை, 200 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து, ஸ்டார் பஜாரை நிர்வகித்து வரும், டிரென்ட் ஹைபர்மார்க்கெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் தாபூ கூறியதாவது: தற்போது, அமைப்பு சார்ந்த பல்பொருள் அங்காடிகளுக்கு, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. ஸ்டார் பஜாருக்கு, 41 ஸ்டோர்கள் உள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள், ஸ்டோர்களின் எண்ணிக்கை, 65 ஆக அதிகரிக்கப்படும். 2020ல், ஸ்டார் பஜார் ஸ்டோர்களின் எண்ணிக்கை, 200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு, தென் இந்தியாவின் முக்கிய நகரத்திலும், ஒரு ஸ்டோரை துவக்க உள்ளோம். 10 லட்சம் வாடிக்கையாளர்கள், ஸ்டார் பஜாருக்கு உள்ளனர். இவர்களில், 8 லட்சம் பேர், தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர். ஸ்டார் பஜாரின் பெருமளவு வியாபாரம், கிளப் கார்டு உறுப்பினர்களால் நடைபெற்று வருகிறது. மேலும், எஸ்.பி.ஐ., கார்டு, டாடா கேப்பிட்டல் ஆகியவற்றுடனும் இணைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|