வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்புவியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
07:41

தேசிய பங்குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, கடந்த வாரம் அதன் தொடர்ச்­சி­யான உயரும் போக்கில் புதிய உச்­சத்தை தொட்­டது. நிப்டி 9500 என்ற நிலையை கடந்து வர்த்­த­க­மா­னது. இருப்­பினும் வார இறுதி நாட்­களில், சர்­வ­தேச சந்­தையில் பங்கு வர்த்­தகம் சரிவை சந்­தித்த போது, அதன் தாக்கம் நம் இந்­திய சந்­தை­யையும் பாதித்­தது. இதன் விளை­வா­கவும், மற்றும் ஜி.எஸ்.டி., எனப்­படும் நாடு முழு­வதும் அமல்­ப­டுத்­தப்­படும் வரி விகி­தங்கள் வெளி­யி­டப்­பட்­டன; அதில் குறிப்­பாக, சில துறை­க­ளுக்கு நன்­மை­யா­கவும், சில­வற்­றுக்கு பாத­க­மா­கவும் இருக்கும் என்ற எதிர்­பார்ப்பும் சந்­தையில் பங்­குகள் விலை வீழ்ச்­சி­ய­டைய கார­ண­மா­கி­யது.

இந்த வாரம் ஆரம்­பத்தில், ஜி.எஸ்.டி., சம்­பந்­தப்­பட்ட பங்­குகள் விலையில் அதிக மாற்­றங்கள் காணப்­படும். எப்.எம்.சி.ஜி., இண்டெக்ஸ் அதன் புதிய உச்­சத்தை தொட்­டது. இத்­து­றைக்­கான ஜி.எஸ்.டி., வரி, தற்­போ­தைய வரியை விட குறை­வாகும், இதனால் டூத் பேஸ்ட், ஹேர் ஆயில், சோப் போன்­ற­வற்­றுக்­கான வரி குறையும். சிக­ரெட்டில் எந்த மாற்­றம்­இல்லை. மருத்­துவம் மற்றும் கல்­வித்­துறை போன்­ற­வற்­றுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு கொடுக்­கப்­பட்­டது. இத்­துறை சார்ந்த பங்­கு­க­ளுக்கு இது சாத­க­மாகும். கன­ரக தொழிற்­சாலை மற்றும் கட்­டு­மான துறைக்கும் இது ஓர­ளவு சாத­க­மான சூழல் ஆகும். சேவை வரி உயர்வு ஓட்டல் பங்­கு­க­ளுக்கு பாத­க­மாகும்.

வரும் நாட்­களில் காலாண்டு அறிக்கை வெளி­வர உள்ள நிறு­வ­னங்­களின் லாபம் ஈட்டும் திறன் அதிகம் எனில் சந்­தையில் மாற்றம் நேரிட உதவும். தென்­மேற்கு பருவ மழை கேர­ளாவில் இந்த வாரம் துவங்கும் எனில், இது பங்கு வர்த்­த­கத்­துக்கு சாத­க­மாக அமையும். இந்த வாரம் தேசிய பங்கு சந்தை குறி­யீடு நிப்­டியைப் பொறுத்­த­வரை 9580 என்ற நிலை ரெசிஸ்டென்ட் ஆகும். குறையும் நிலையில் 9400க்கு கீழ் தின­சரி முடிவு அமையும் சூழலில், சந்­தையின் போக்கு மீண்டும் குறை­யக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 9305 மற்றும் 9222 சப்போர்ட் ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்:இந்­தியா சிமென்ட்ஸ்,ஜே.எஸ்.டபுள்யு எனர்ஜி,சவுத் இந்­தியன் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா

பங்கு சந்தை மற்றும் கமா­டிட்டி பகு­தி­களில் தரப்­படும் தக­வல்கள் அனைத்தும், மிகுந்த கவ­னத்­துடன் தரப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், எதிர்­பா­ராத நிகழ்­வு­களால், சூழல்கள் மாறு­வ­தற்­கான வாய்ப்­புகள் உண்டு என்­பதை வாச­கர்கள் புரிந்­து­ கொண்டு, முத­லீட்டு முடி­வு­களை, தங்கள் சொந்த பொறுப்பில் மேற்­கொள்­ளவும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)