பதிவு செய்த நாள்
22 மே2017
07:42
தொடர்ந்து பல வாரங்களாக புதிய உச்சங்களை தொட்ட இந்திய சந்தை, இந்த வார இறுதியில் தெளிவாக தொய்வுற்றது.
இந்த தொய்விற்கு காரணங்கள் பல உண்டு. இந்திய சந்தை, உலக சந்தையோடு ஒருங்கிணைந்தது என்பது ஒரு முக்கிய காரணம். அமெரிக்காவில், டிரம்ப் ஆட்சி அமைந்த பிறகு, அந்த நாட்டு சந்தை கண்ட தொடர் ஏற்றம் நிறைவுக்கு வரும் நேரத்தில், அந்த தாக்கம் உலக சந்தையில் தொய்வை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாடு, ஒவ்வொரு நாட்டு சந்தையிலும் ஒவ்வொரு விதமாக அமையும். அந்தந்த நாட்டு பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சந்தைகளின் மாற்றங்கள் அமையும். ஒருவேளை, டிரம்ப் அரசு மேலும் அரசியல் சிக்கல்களைச் சந்தித்தால், அந்த தாக்கமும் அனைத்து நாடுகளின் சந்தைகளையும் பாதிக்கும். எல்லா நாடுகளிலும் சந்தை ஏற்றம் கண்ட நிலை தொடர்ந்து நிலைக்காது. ஒவ்வொரு நாட்டு சூழலுக்கு ஏற்ப, அந்த நாட்டு சந்தை மாற்றங்கள் இனி அமையும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நம் சந்தையின் முக்கிய கவலைகள் வங்கி கடன் மீட்பு மற்றும் உற்பத்தி வளர்ச்சி. வாராக் கடன்களை திரும்ப பெற, பொதுத் துறை வங்கிகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். அந்த முயற்சிகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், சந்தையின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. இந்த முன்னேற்றங்கள் மித வேகத்தில் மட்டுமே நகர்ந்தாலும், நிறைவான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றங்கள் இந்த நிதியாண்டுக்குள் தெளிவாக தென்பட வேண்டும். வங்கிகளின் நிலை முன்னேற வேண்டிய அதே சூழலில், நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி கொள்ளளவை அதிகப்படுத்த தேவையான முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். நம் பொருளாதார வளர்ச்சி பெருக இந்த முதலீடுகள் மிக அவசியம்.
உள்நாட்டு நுகர்வு தொடர்ந்து வளர்ச்சி காண வேண்டும். சமீபஆண்டுகளில், இறக்குமதிக்குப் பதிலாக, உள்நாட்டு உற்பத்தி மூலம் நம் தேவைகளை நிறைவு செய்யும் முயற்சிகள் அரசால் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் பல முக்கிய உற்பத்தி துறைகளில் நெடுங்கால மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின் துாண்களாக ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு நுகர்வுகள் அமைந்தன. இனி வரும் ஆண்டுகளில், இறக்குமதிக்கு மாற்று ஏற்படுத்துவதே நம் முக்கிய குறிக்கோளாக அமையும். விவசாய உற்பத்தி, மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, ஜவுளி உற்பத்தி மற்றும் உருக்கு உற்பத்தியில் தொடர்ந்து பெருவளர்ச்சி காண வேண்டும். இதுவே வங்கி துறை சார்ந்த சிக்கல்களையும் தீர்த்து வைக்கும்.
உலகளவில் இந்தியா பல துறைகளில் முக்கிய உற்பத்தியாளராகவும், மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடாகவும் இடம் பிடிக்க வேண்டும். அடிப்படை பொருளாதார மாற்றங்களே ( மேக்ரோ அளவில்) இனி நம் சந்தையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முடியும். பிற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியா ஓர் உற்பத்தி நாடாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தையின் அவசரப் போக்கிற்கு பொருளாதாரம் ஈடு கொடுக்காது. ஆகவே, சந்தை தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|