பதிவு செய்த நாள்
23 மே2017
07:28
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம், அரசு, தனியார் கடன் பத்திரங்கள், பங்குகள், மாநில வளர்ச்சி திட்ட கடன்களில், குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு செய்துள்ளது.
இவற்றின் வாயிலாகவும், வட்டி, டிவிடெண்டு வருவாய், பங்கு விற்பனையில் லாபம் போன்ற இதர இனங்கள் மூலமாகவும், 2016 – 17ம் நிதியாண்டில், எல்.ஐ.சி.,க்கு மொத்தம், 1,80,117 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு களின் சந்தை மதிப்பு, 17.08 சதவீதம் அதிகரித்து, 21,09,253 கோடி ரூபாயில் இருந்து, 24,69,589 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களில் மட்டும், எல்.ஐ.சி., 2.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. பங்குகளில், மொத்தம், 41,751 கோடி ரூபாய் முதலீடு செய்து, அவற்றின் விற்பனை மூலம், 19,302 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது என, எல்.ஐ.சி., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|