பதிவு செய்த நாள்
23 மே2017
07:31
புதுடில்லி : ஜப்பானைச் சேர்ந்த, சாப்ட் பேங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனத்தின், சாப்ட் பேங்க் விஷன் பண்டு எனும் நிதியத்தின் கீழ் திரட்டப்பட்ட, 9,300 கோடி டாலர் மூலதனத்தை, அடுத்த ஆறு மாதங்களில், 10 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிதி, தொழிற்நுட்பத் துறையில் முதலீடு செய்யப்படும். இதன்படி, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த, தொழிற்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லது பகுதி முதலீடு செய்வது உள்ளிட்ட வர்த்தகத்திற்கு, இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும்.
புதிய தொழிற்நுட்பம், குறிப்பாக, கருவிகளுக்கிடையேயான இணைய பயன்பாடு, அறிவுசார் சொத்துரிமை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில், இந்த நிதி முதலீடு செய்யப்படும். மேலும், தொலை தொடர்பு, அடிப்படை கட்டமைப்பு, கணினி சார்ந்த உயிரி தொழிற்நுட்பம், மேக கணினி தொழிற்நுட்பம், மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்டவற்றுக்கும் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|