பதிவு செய்த நாள்
24 மே2017
03:30
புதுடில்லி : ‘பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர்’ விஜய் சேகர் சர்மா கூறியதாவது: பேடிஎம், ‘இ – வாலட்’ சேவையை தொடர்ந்து, ‘பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்’ சேவையில் நுழைந்துள்ளோம். இந்தியாவில், 22 கோடி வாடிக்கையாளர்கள் பேடிஎம், ‘இ – வாலட்’ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும், உரிய விதிமுறைகளை பின்பற்றி, பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவர்.
இவ்வங்கி, வாடிக்கையாளர்களின் டிபாசிட்டிற்கு, 4 சதவீத ஆண்டு வட்டி வழங்கும். வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன், வலைதள பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது; டிபாசிட்டுகளுக்கு, ‘கேஷ்பேக்’ சலுகை கிடைக்கும். வங்கி, அடுத்த இரு ஆண்டுகளில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்படும் டிபாசிட், பாதுகாப்பான அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதுதவிர, இடர்ப்பாடு உள்ள எந்த பிரிவிலும், வாடிக்கையாளர்களின் பணம் முதலீடு செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|