பதிவு செய்த நாள்
26 மே2017
23:48
கோல்கட்டா : தேசிய சாப்ட்வேர் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ ஐ.டி., துறையில், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நலன் காக்கும் நோக்கில், கோல்கட்டாவில், தனி கவுன்சில் அமைத்துள்ளது. முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் தலைவராக, கமல் அகர்வாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, ஐ.டி., துறையில் பெரிய நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதனால், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பக்கம், அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஐ.டி., துறையின் அடுத்த அலை, இந்த நிறுவனங்கள் மூலம் தான் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு, இந்நிறுவனங்களிடம், வளர்ச்சி காண்பதற்கான வல்லமை உள்ளது. அத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து, கைதுாக்கி விடும் நோக்கில், கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க, கவுன்சில் துணை நிற்கும். இதுபோல, நாடு முழுவதும் சிறிய, நடுத்த நகரங்கள்தோறும் பிரத்யேக கவுன்சில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|