பதிவு செய்த நாள்
26 மே2017
23:50
பெங்களூரு : ‘‘சமீபகாலமாக, ஐ.டி., நிறுவனங்கள், செலவை குறைக்கும் நோக்கில், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது,’’ என, ‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம், மத்திய மற்றும் மூத்த நிலை பணிகளில், நுாற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இது, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பணியாளர்களின் பணி தகுதியை மதிப்பிட்டு மேற்கொள்ளும், வழக்கமான நடைமுறை தான் என, இன்போசிஸ் தெரிவித்து உள்ளது.
காக்னிஸன்ட் நிறுவனம், அதன் இயக்குனர்கள், மூத்த துணைத் தலைவர்கள், இணை துணைத் தலைவர்கள் ஆகியோருக்கு, 6 – 9 மாத ஊதியத்துடன், தன் விருப்ப பிரிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
விப்ரோ நிறுவனம், 600 பேருக்கு பணியில் இருந்து விடை கொடுத்துள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை, இரண்டாயிரத்தை தாண்டும் என, கூறப்படுகிறது. ஐ.டி., நிறுவனங்கள் அவற்றின் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர்கள் மூலம், பணிகளை தன்னிச்சையாக செய்யும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால், இவ்வகை பணிகளில் உள்ளோர் வேலையிழப்பிற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், ஐ.டி., நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக, இன்போசிஸ் நிறுவனரும், அதன் கவுரவ தலைவருமான நாராயணமூர்த்தி, ‘டுவிட்டர்’ செய்தியில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், இன்போசிஸ் எத்தனை ஊழியர்களுக்கு பணி விடைவோலை வழங்க உள்ளது குறித்து, அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|