பதிவு செய்த நாள்
26 மே2017
23:51
புதுடில்லி : மின் வாகனங்களுக்கு தேவைப்படும், லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இந்திய சந்தையில், சீனா நுழைய திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், உள்நாட்டில், இத்தகைய பேட்டரிகளை தயாரிப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே கூறியதாவது: உலகில், இன்று சீனா மட்டுமே, லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில், மின்சார கார்களை ஊக்குவித்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடித்ததாக இருக்காது. உள்நாட்டில் பேட்டரி தயாரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள பேட்டரியை, ரீமாடல் செய்யும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம், அத்தகைய பேட்டரிகளை வாகனங்களில் எளிதாக பயன்படுத்த முடியும். மேலும், 100 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில், இத்தகைய பேட்டரிகளுக்கான தயாரிப்பு வசதிகளை ஏற்படுத்த இருக்கிறோம்.
மாருதி சுசூகி நிறுவனமும், லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிப்புக்காக, 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறது. உள்நாட்டில் கார் தயாரிப்பாளர்கள், லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முன்வந்தால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|