பதிவு செய்த நாள்
26 மே2017
23:52
புதுடில்லி : நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 15 வாகன திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்க இருக்கிறது. 11 மாநிலங்களில் உள்ள, அரசு நடத்தும், ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்களில் இந்த மையங்களை அமைக்க, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, நிஜாமுதீனில் உள்ள, ஐ.டி.ஐ., நிறுவனத்தில், இந்த மேம்பாட்டு மையத்தை, மாருதி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, கெனிச்சி அயுக்கவா துவக்கி வைத்துள்ளார். இந்த மையங்களில் மாணவர்கள், வாகன பழுது நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கான பயிற்சிகள் பெற, தேவையான பட்டறைகள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, மாருதி நிறுவனமே, தகுதியான முழுநேர பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சிகளை வழங்க இருக்கிறது.
இது குறித்து, கெனிச்சி அயுக்கவா கூறியதாவது: இந்த மையங்களை ஏற்படுத்த, 6 கோடி ரூபாயை, மாருதி நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. மேலும் இதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு, 600 மாணவர்கள் பலன் பெறுவார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.25 லட்சம் திறன் வாய்ந்த ஊழியர்கள், வாகன துறையின் ஒர்க்ஷாப்புகளில் தேவைப்படுவர் என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|