திறன் மேம்பாட்டு மையங்கள்; மாருதி சுசூகி அமைக்கிறதுதிறன் மேம்பாட்டு மையங்கள்; மாருதி சுசூகி அமைக்கிறது ... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரக்கரி: விலை வீழ்ச்சியால் பாதிப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரக்கரி: விலை வீழ்ச்சியால் பாதிப்பு ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்க சலுகை காலம் 7 ஆண்டுகளாக நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
23:52

புதுடில்லி : வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு அளிக்­கப்­படும் பல்­வேறு சலு­கை­க­ளுக்­கான வரம்பு, ஐந்து ஆண்­டு­களில் இருந்து, ஏழு ஆண்­டு­க­ளாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்­கான வரை­ய­றை­யில், சில மாற்­றங்­களை செய்­துள்­ளது.

அது தொடர்­பாக வெளி­யி­டப்­ பட்­டுள்ள அறிக்கை: புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­கள்; பொருட்­கள் அல்­லது சேவை­களை மேம்­ப­டுத்­து­தல்; சொத்­து­களை உரு­வாக்­கு­தல்; அதி­க­ள­வில் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கக் கூடிய வர்த்­த­கம் அல்­லது சேவை­கள் ஆகி­ய­வற்­றில் ஈடு­ப­டு­பவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் வகை­ய­றா­வுக்­குள் அடங்­கும். கடந்த, 2016ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘ஸ்டார்ட்­ அப் இந்­தியா ஆக் ஷன் பிளான்’ திட்­டத்­தின் கீழ், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், பதிவு செய்த நாளில் இருந்து, ஐந்து ஆண்­டு­கள் வரை, பல்­வேறு சலு­கை­கள் பெற தகுதி உடை­யவை என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த சலுகை, தற்­போது, 7 ஆண்­டு­க­ளாக நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த கால­வ­ரைக்­குள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னத்­தின் ஆண்டு விற்­று­மு­தல், 25 கோடி ரூபாய்க்கு குறை­வாக இருந்­தால் மட்­டுமே, சலு­கை­கள் கிடைக்­கும். உயிரி தொழிற்­நுட்­பத் துறை­யைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், சலு­கை­களை பெறு­வ­தற்­கான கால வரம்பு, 10 ஆண்­டு­க­ளாக நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. அறி­வி­யல், உயிரி தொழிற்­நுட்­பம் உள்­ளிட்ட துறை­களின் மூத்த அதி­கா­ரி­களை கொண்ட குழு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னத்­திற்­கான தகு­தியை ஆராய்ந்து, சான்­றி­தழ் வழங்­கும். இதற்கு, வலை­த­ளம் அல்­லது ‘மொபைல் ஆப்’ மூலம், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்து, சான்­றி­தழ் பெற்று, வரிச்­ச­லு­கை­களை கோர­லாம்.

உரிய ஆவ­ணங்­களை அளிக்­கா­மலோ அல்­லது தவ­றான தக­வல்­களை அளித்தோ சான்­றி­தழ் பெற்­றது தெரிய வந்­தால், அந்­நி­று­வ­னத்­தின் சான்­றி­தழ் செல்­லாது என அறி­வித்து, சலு­கை­கள் ரத்து செய்­யப்­படும். இந்த சலு­கை­க­ளுக்­காக, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், தொழில் கூட்­ட­மைப்­பு­கள் அல்­லது ‘இன்­கு­பேட்­டர்’ எனப்­படும், வளர்ப்­ப­கங்­கள் இட­மி­ருந்து, எவ்­வி­த­மான பரிந்­துரை கடி­தங்­க­ளை­யும் சமர்ப்­பிக்க தேவை­யில்லை.

புதிய தொழில்­களை சுல­ப­மாக துவக்­க­வும், தொழில்­மு­னை­வோரை ஊக்­கு­விக்­க­வும், ‘ஸ்டார்ட் அப்’ விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்டு உள்ளன. குறிப்­பாக, வேலை தேடு­வோ­ருக்கு பதி­லாக, வேலையை உரு­வாக்­கு­வோர் உள்ள நாடாக, இந்­தி­யாவை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும் என்ற நோக்­கத்­தில், இந்த மாற்­றங்­கள் செய்­யப்­பட்டு உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு, முதல் மூன்று ஆண்­டு­க­ளுக்கு வரு­மான வரி­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. இச்­ச­லுகை, ஐந்து ஆண்­டு­க­ளாக உய­ரும். இந்­நி­று­வ­னங்­களில், நிதி நிறு­வ­னங்­கள் செய்­யும் முத­லீ­டு­கள் மீதான வரி நீக்­கப்­பட்டு உள்­ளது; தனி­ந­பர் முத­லீ­டு­கள் மீதான வரு­வாய்க்கு, மூல­தன ஆதாய வரி­யில் இருந்து, விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)